சென்னை, பிப்,25- மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட 100 நாற்காலிகள் மற்றும் மேசைகளை சென்னையில் உள்ள ராணி மெய்யம்மை அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு வழங்கப் பட்டது. சன்ஃபீஸ்ட் தன்னார்வ தொண்டு நிறுவன மும், விதை மறு சுழற்சி நிறுவனமும் இணைந்து 21,600 கிலோ கிராம் பிளாஸ்டிக் கழிவு களிலிருந்து பெஞ்சுகள் தயாரிக்கப்பட்டு 1230 பெஞ்சுகள் மற்றும் மேசை களாக மாற்றப்பட்டு, நகரம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப் படுகின்றன. இந்த பெஞ்சுகள் மற்றும் மேசைகளை அதி காரப்பூர்வமாக ஒப்படைக் கும் நிகழ்வில் மகளிர் மேம்பாட்டுக்கழக மாவட்ட வருவாய் அதிகாரி எஸ். விஜய லட்சுமி, சென்னை பல்கலை கழக கிண்டி வளாக பேராசிரியர். அமுதா சந்தானம் ஊட்டச் சத்து அறிவியல் பிரிவு தலைவர் பாவ்னா ஷர்மா. வாழ்க்கைக்கான வழி "சன்ஃபீஸ்ட் தன்னார்வ நிறுவன தலைவர் கே. உதய்குமார் விதை மறு சுழற்சி நிறுவன நிர்வாகி திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.