districts

img

வேலூர் விஐடியில் தூய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம் திறப்பு

வேலூர், மே 3- வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் தூய்மையான சூழலுக்கான மையத்தை விஐடி நிறுவனர், வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் முன்னிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ் திறந்து வைத்தார்.  அப்போது கிறிஸ் ஹோட்ஜஸ் பேசியதாவது, அமெரிக்க துணைத் தூதரகம் விஐடியுடன் நீண்ட நெடிய உறவைக் கொண்டுள்ளது என்றார். “இன்று நாம் இங்கு செய்வது கல்வியை மட்டும் கட்டி யெழுப்புவது மட்டுமல்ல, உறவை வலுப்படுத்துவதும் ஆகும். மேலும் பல நற்செயல்களை செய்வதற்கு எங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. அமெரிக்க-இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் நாம் வெற்றிபெறப் போகிறோம் என்றால், நாம் எவ்வாறு கல்வி கற்கிறோம், எப்படி ஆராய்ச்சி செய்கிறோம், மற்றும் எப்படி வரையறுத்துள்ள என பல்வேறு பிரிவுகள் உட்பட அனைத்தும் பார்க்கப்படுகிறது. நாங்கள் எப்படி வேலை செய்கிறோம் என்றும், சமூக அறிவியல், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல், கட்டிடக்கலை மற்றும் இயந்திரப் பொறியியல் ஆகியவை எப்படிச் சந்திக்கின்றன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று நான் இங்கு உங்கள் அனைவரையும் கேட்க விரும்புகிறேன்.  உங்கள் முன்முடிவுகள் மற்றும் உங்கள் அனுமானங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய ஒத்துழைப்பு களுக்கு நீங்களும் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். பின்னர் வி ஐ டி வேந்தர் டாக்டர். கோ. விசுவநாதன் பேசுகை யில், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் பல்வேறு படிப்பு களைப் படிப்பதைச் சுட்டிக்காட்டினார். “வெளிநாட்டில் உயர்கல்விக்கான இறுதி இலக்கு அமெரிக்கா என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு காலத்தில் அது ஐரோப்பிய நாடு களின் ஆதிக்கத்தில் இருந்தது. 20 ஆம் நூற்றாண்டுக்கு பின்பு உலக அளவில் உயர்கல்வி என்றால் அது அமெரிக்கா என்ற நிலை உருவாகியுள்ளது. தூய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம் குறித்து பேசிய டாக்டர் கோ.விசுவநாதன், ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) ஏற்றுக்கொண்ட உலக ளாவிய நிலையான வளர்ச்சி இலக்கு களுடன் தொடர்புபடுத்த இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். தூய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம், உள்ளூர் முதல் உலக அளவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் நிலை யான தீர்வுகளை கண்டறிவதில் கவனம் செலுத்துகிறது,” என்றார். தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நெட்வொர்க்குகள் மூலம் அரசாங்கம், தொழில்துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பதன் மூலம் இந்த மையம் சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்கிறது என கூறினார்.