districts

img

மக்களுக்கான மருந்து கொள்கையை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் பிரச்சாரம்

காஞ்சிபுரம், ஜூலை 24- மக்களுக்கான மருந்து கொள்கையை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. சுகாதாரமும் மருத்துவமும் அரசின் கட்டுபாட்டிற்குள் இருக்கவேண்டும். மக்களுக்கான மருந்து கொள்கையை ஒன்றிய அரசு வகுக்கவேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு சராசரி யாக 12 விழுக்காடு ஜி.எஸ்.டி வரி வசூலை  ரத்து செய்ய வேண்டும். மருந்துகளின் விலை உற்பத்தி விலையிலிருந்து லாபம் வைத்து நிர்ணயிக்கப்படாமல், சந்தை விலையிலிருந்து மருந்து விலையை தீர்மானிப்பதை கைவிட வேண்டும்.  பொதுத் துறை மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனங் களை அரசு சீரமைத்து உற்பத்தியை மேற்கொண்டு மக்களுக்கு மருந்து தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.  மக்களுக்கு தேவைப்படக்கூடிய காப்புரிமை பெறப்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு “கட்டாய உரிமம்” வழங்கி குறைந்த விலையில் தயாரித்து விநியோகம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  ஒன்றிய அரசு செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பாக ஜி.கே.மண்டபம், பெரியார் தூண்,  டோல்கேட் ஆகிய இடங்களில் திங்களன்று தெருமுனை பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு சங்கத்தின்  கிளைச் செயலாளர் பி.கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் எஸ்.வாசுதேவன், மாநில துணைத் தலைவர்  எம்.சசிகுமார், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் டி.ஸ்ரீதர், எஸ்.சீனிவாசன், ஆர்.மதுசூதனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்க நிர்வாகிகள் ஜி.சுரேஷ், டி.சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.