districts

img

ஊத்தங்கரை அருகே கருகும் தென்னை மரங்கள்

கிருஷ்ணகிரி, ஜன.17- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள மத்தூர்,போச்சம்பள்ளி சுற்றுவட்ட பகுதிகளில் சுமார் 500 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னை மரங்களில் கருந்தலை புழு நோய் காரணமாக கீற்று கள் அனைத்தும் தீப்பிடித்தது போல் வேக மாக காய்ந்து கருகி வருகின்றன. இந்த நிலை தொடருமானால் வெகு விரைவில் மரங்கள் அனைத்தும் பட்டுப்போகும் நிலை ஏற்படும். இதுகுறித்து வேளாண்மை துறை அலுவலர்களிடம் பலர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பல விவசாயிகள் வேதனையுடன் தெரி வித்தனர். எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வேளாண் துறையினர் தென்னை மரங்க ளில் ஏற்பட்டுள்ள நோயைப் போக்கி மரங்களை காப்பாற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் கே.சி.இராமசாமி,தலைவர் சின்னசாமி, பொருளாளர் கடல் வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளனர்.