அம்பத்தூர், ஜூலை 25-
ஆவடி அடுத்த பட்டா பிராம் அடுத்த சோராஞ் சேரி, சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவர் அணைக்கட்டு சேரியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு பழனிக்கு சென்றார். பின்னர் திங்கட்கிழமை இரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த னர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 சவரன் நகை, 2.67 லட்சம் ரொக்கம் ஆகி யவை கொள்ளை அடிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேந்தி ரன் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.