districts

img

பாலம் கட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம், ஜூலை 29- நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் சார்பில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.  இது நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் பொதுமக்களுக்கு சிரமமின்றி பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், விழுப்புரம் 4 வழிச்சாலை பகுதியிலிருந்து வரக்கூடிய மழைநீர் ஆங்காங்கே தேங்கி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்குவதை கண்டறிந்து அதை சீர் செய்ய  2021-2022-ஆம் நிதியாண்டில் ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.