districts

img

செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலை முடக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு

திருவள்ளூர், பிப்.13- மீட்கப்பட்ட கொத்தடி மைகளுக்கென உரு வாக்கப்பட்ட செங்கல் சூளை உற்பத்தி செய்யும் தொழிலை முடக்கும் அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுப்பதோடு, தொடர்ந்து தொழிலை நடத்த வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் கடம்பத்தூர் பிடிஒ அலுவ லகம் முன்பு மேளதாளத்து டன் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவ ட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமான  கடந்த 2023 பிப்.9 அன்று கடம் பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் செங்கல் சூளை தொழில் உற்பத்தி குழு துவங்கப்பட்டது. திருவள்ளூர் அருகில் உள்ள அதிகத்தூர், பிஞ்சி வாக்கம், கூவம், திருப்பாச்  சூர் ஆகிய ஊராட்சிகளி ருந்து கொத்தடிமைகளாக இருந்த 28 இருளர் இன குடும்பங்கள் மீட்கப்பட்டன. இந்த மக்களுக்கு மறு வாழ்வு திட்டத்தின் மூலம் பிஞ்சிவாக்கத்தில் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் ஆழ்துளை கிணறு, மின் இணைப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்காக ரூ.9.90 லட்சத்தில் திட்டம் துவக்கப்பட்டது. பின்னர் 28 குடும்பங்களும் செங்கல் சூளை உற்பத்தியில் ஈடு பட்டு 50 ஆயிரம் செங்கற்  கள் உற்பத்தி செய்யப் பட்டது. இதில் கிடைத்த வரு வாயில் அந்த மக்க ளுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை. செங்கல் தயாரிக்க பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்  செங்கல் தொழி லகத்தை சிதைக்கும் வகை யில், கடம்புத்தூர் பிடிஒ அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால்  செங்கல் சூளை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விடியல் திட்டத்தின் மூலம் வழிகாட்டி நெறிமுறைகள் படி 2023 செப்டம்பர் மாதம் தொழில் குழுவிற்கு நிதி விடுவிக்கப்பட வேண்டும் ஆனால் ரூ.7 லட்சம் இது வரை வழங்கவில்லை. பிஞ்சிவாக்கம் ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிலேயே வைக்கப் பட்டுள்ளது.   இந்த நிலையில் முதலமைச்சரின் விடி யல் திட்டத்தில்,  மீட்கப் பட்ட இருளர் இன கொத்த டிமை தொழிலாளர்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (பிப்.13), மேளதாளத்துடன் தாம்பூல தட்டில் மலர்  மாலை, மனு வைத்து கடம்பத்தூர் பிடிஒ -விடம் வழங்க சென்றனர். பொறுப்பான அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனு கொடுக்க வந்த மக்கள் ஒரு மணிநேரம் காத்திருந்து பின்னர் பிடிஒ வந்த பிறகு மனுவை அளித்தனர். கொத்தடிமைகளை பாது காக்க  மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் இ.கங்காதுரை, மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஜி.சம்பத், மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகி கள் கே.முருகன், எம்.சின்னராசு, டி.டில்லி, எம்.தமிழரசி, எஸ்.தேவி ஆகி யோர் பேசினர்.