சென்னை, ஜூலை 29-
தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்றும் அதை கட்டாயம் தாய் குழந்தைக்கு தர வேண்டும் என்றும் சென்னை மாநக ராட்சி ஆணையர் ஜெ. ராதா கிருஷ்ணன் கூறினார்.
வடபழனி விஜயா மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத்தை யொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “தாய் பால் குழந்தை களுக்கான முதல் நோய் தடுப்பு மருந்து” என்றார்.
குழந்தைகளுக்கான ஒர் தன்னிகரற்ற உணவும் கூட, பிறந்த குழந்தை, குறைப்பிரசவ மற்றும் நோய்வாய்ப்பட்ட தீவிர சிகிச்சை தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் அவசியம் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் விஜயா மருத்துவ அறக் கட்டளை நிர்வாக அறங் காவலர் ஸ்ரீமதி பாரதி ரெட்டி பேசுகையில் “தாய்ப்பால் என்பது தாய்க்கும் சேய்க்குமான ஒரு உறவுப்பாலம்” என்றார்.