சென்னை, ஆக,22 –
சென்னை ரேடியல் சாலையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர்வழங்கல் துறை அமைச்சர் . கே. என். நேரு இப்பிரிவினை திறந்து வைத்தார். பக்கவாதம் மற்றும் மூளை – நரம்பியல் கோளாறுகள் சமுதாயத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை பாதித்து வருகின்ற நிலையில், நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையின் மூலம் குணமளிப்பதற்கு இங்கு அனுபவம் மிக்க, சிறப்பு மருத்துவர்களின் நிபுணர் குழு செயலாற்றுகிறது என்று மருத்துவமனைகளின் நிறுவனர் டாக்டர். ச. சந்திரகுமார் தெரிவித்தார்.
இப்பிரிவில் மூளை மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை, மூளை நரம்பியல் (வயது வந்தோர் மற்றும் குழந்தைகளுக்கான), நரம்பியல் சார்ந்த மயக்க மருந்தியல் மற்றும் நரம்பியல் சார்ந்த தீவிர சிகிச்சை, மருத்துவ செயல்முறைகள், கதிர்விச்சு சிகிச்சை, மூளை நரம்பியல் சார்ந்த நடத்தைகள் மற்றும் நரம்பியல் மறுவாழ்வு என பல்வேறு சிறப்புத் துறைகள் உள்ளன.