districts

img

திருக்கழுக்குன்றத்தில் போதைக்கு எதிராக ரத்ததான முகாம்

செங்கல்பட்டு, ஜுலை. 26-

      தடைசெய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்  திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்றது.

     திருக்கழுகுன்றம் ஒன்றிய அமைப்பு குழு  அமைப்பாளர் என்.சுந்தர் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை,தொன்போஸ்கோ பாலிடெக்கினிக் கல்லூரி  இணைத்து போதை பொருட்களுக்கு எதிராக ரத்ததான முகாம் புதனன்று (ஜூலை 26) நடைபெற்றது.  வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மு.பிரியங்கா, மாவட்டத் தலைவர் இரா.சதீஷ், மாவட்டச் செயலாளர் க.ஜீவானந்தம், ஒன்றிய நிர்வாகிகள் சுரேஷ், சுதாகர், வினோத், கிஷோர்,  ரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் அனிதா, அருட்தந்தைகள் ஜான் ஜோசப், வர்கீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரத்தம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.