districts

img

வேலூர் மாவட்ட கட்டுமான சங்கம் இரண்டாக பிரிப்பு

வேலூர், செப் 25 - வேலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை மாவட்டத் தலைவர் டி.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் த.ஞானமுருகன் வரவேற்றார்.சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தார். கட்டுமான தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் லூர்து சாமி முடித்து வைத்து பேசினர். சிஐடியு ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் ஏ.தவராஜ், கட்டுமான சங்க மாவட்ட இணைச் செயலாளர் எம்.பி.ராமச்சந்திரன், சிஐடியு வேலூர் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வீடு கட்டும் திட்டத்தில் உள்ள தேவையற்ற நிபந்தனைகளை நீக்க வேண்டும். நலவாரிய ஆன்லைன் பதிவு நடைமுறைகள் எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் வேலூர்-திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இரண்டு மாவட்ட குழுக்களாக பிரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவராக டி.சுப்பிரமணி, செயலாளராக ஏ.பழனியப்பன், பொருளாளராக கே.பாண்டுரங்கன் உள்ளிட்ட 17 மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.