districts

கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலம் மீட்பு

பூந்தமல்லி,ஆக.2-

     பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி  உள்ளது. இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.  இடத்தை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தப் பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர்.  

     இதைத்தொடர்ந்து புதனன்று அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் வருவாய் துறையினர் அங்கிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.