சிதம்பரம், ஜன.7- பரங்கிப்பேட்டை பகுதியில் தண்ணீரின்றி கருகும் சம்பா நெல் பயிரை காப்பாற்ற வீராணம் ஏரியிலிருந்து கூடு தலாக தண்ணீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் பி.முட்லூர், அகரம், பெரிய குமட்டி , அரியகோஷ்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் சம்பா நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு செய்துள்ளனர்.இந்த பகுதி வீராணம் ஏரி பாசனத்தின் கடைமடை பகுதியாகும். தற்போது நெற்பயிர் கதிர் வரும் நிலை யில் பாசனத்திற்கு கிடைக்கவில்லை. இத னால், நெற்பயிர்கள் கருகும் நிலையில் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சற்று ஆறுதல் அளித்தாலும் நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில், நீர்வளத்துறை அதி காரிகளை சந்தித்த விவசாயிகள், வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். வீராணத்தில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது, கடந்த 21 ஆம் தேதி அரியகோஷ்டி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. 22 கி.மீ தூரம் கடந்து அரியகோஷ்டி, அகரம் ஆகிய கிராம வயல்களில் கடந்து வரவேண்டும். ஆனால், தண்ணீர் வரும் வழியில் விவ சாயிகள் சிலர் தண்ணீரை தடுத்து பாசனம் செய்தால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கரிகால சோழன், அரிய கோஷ்டி வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்துவோர் சங்கத்தினர் சிதம்பரம் சாராட்சியர் சந்தித்தனர். அப்போது, வீராணத்தில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரைக்கும் பாசனத்துக்கு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளனர். உரிய காலத்திற்குள் தண்ணீர் கிடைக்காமல் சம்பா நெல் பயிர் கருகி காய்ந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக கடன் வாங்கி செலவு செய்திருக்கும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.