districts

img

எருது விடும் திருவிழாவிற்கு தடை

வேலூர்,ஜன.11- வேலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் எருது விடும் திருவிழாவிற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டில் எருது விடும் திருவிழா நடைபெற்ற கீழ் முட்டுகூர்,ஆற்காட்டான்குடிசை, மேட்டு இடையம் பட்டி ஆகிய கிராமங்களில் உயிரிழப்பு ஏற்பட்டது. மருதவல்லி பாளையம் , கோவிந்த ரெட்டி பாளையம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் வரும் 2026 ஆம் ஆண்டு வரையில் எருது விடும் திருவிழாவிற்கு தடை விதிக்கப்படுகிறது.  இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.