கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் மிகப்பெரிய வெள்ள த்தையும் புயலையும் கொரானா என்ற பெரும் தொற்றையும் எதிர்கொண் ்டது. இக்கா லத்தில் அறிவிக்க ப்பட்ட ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து வருமானம் இழந்து மிகப்பெரும் வறுமைக்குள் தள்ளப்பட்டு பெண்கள் வாழ்ந்து கொண்டிரு க்கின்றனர். இச்சூழ்நிலையில்பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம், குடும்ப வன்முறைஆகியவைகளை எதிர்த்தும் விலைவாசி உயர்வு, ரேஷன் கடை பிரச்சனை, சமையல் எரிவாயு விலை உயர்வு, டாஸ்மார்க் எதிர்ப்பு போராட்டம், 100 நாள் வேலைத்திட்டம் ஆகிய வாழ்வாதார பிரச்சனைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளது.
சிதம்பரம் பத்மினி வழக்கில் காவலர்களுக்கு சிறை தண்டனை பெற்று கொடுத்த இயக்கம், திட்டக்குடி பாதிரியார் 7ம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவிகளை பாலியல் வன்புணர்ச்சி செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதுடன் பல இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்த வழக்கில் நான்காண்டு காலமாக மாணவி களை பாதுகாத்து படிக்க வைத்து நீதிமன்றம் வரை சென்று 17 பேருக்கு தூக்கு தண்டனை, நான்காண்டு, மூன்றாண்டு, 2 ஆண்டு ஆயுள் தண்டனைகள் மற்றும் அபராதம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுக் கொடுத்த இயக்கம். ரெட்டியூர் மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததை கண்டித்து போராடி குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்ச நிவாரணமும் தண்டனையும் பெற்றுக்கொடுத்தது. அதே கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவியை பாலி யல் வன்புணர்ச்சி செய்ததை கண்டித்து போராட்டம் நடத்தி வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் வரை சென்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்சம் நிவாரணமும் வாங்கிக் கொடுத்த இயக்கம். அதேபோல கடலூர் ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்முறை வழக்கில், சிதம்பரம் தீர்த்தாம் ்பாளையத்தில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பரதூர், மெய்யாத்தூர், குமாரக்குடி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர் போராட்டம் நடத்திய நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
நுண் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாத்திட இயக்கம் கண்ட அமைப்பு. கொரானா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு மாணவ மாணவிகள் கல்வி கேள்விக்குறியாகி உள்ள சூழ்நிலையில் இலவச மாலை நேர வகுப்புகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் எழுது பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கியது. சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த தலைவர்களுக்கு மிரட்டல் வந்த பொழுதும் அதை துச்சமென எதிர் கொண்ட அமைப்பு. நூறு நாள்வேலைத்திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கி சட்ட கூலியை முறையாக வழங்கிட வேண்டும்என வலியுறுத்தியும் நகர்ப்புற ங்களுக்கு இச்சட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு பெண்களை திரட்டி பல ஒன்றியங்களில் போராடி சம்பள பாக்கிகளை பெற்று கொடுத்ததுடன் முறையாக வேலையை செய்ய வைப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
பெருந்தொற்று காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் சாலை வசதிகள் கழிப்பறை வசதிகள் ரேஷன் கடை முறைகேடுகள் போன்றவற்றுக்கு எதிராக ஏராளமான போராட்டங்களை நடத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில்உள்ளஅரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பாதுகா க்கப்பட்ட குடிநீர் இல்லை, சுகாதாரமான கழிப்பறை இல்லை, போதுமான படுக்கை வசதி இல்லை, போதுமான உயிர்காக்கும் மருந்துகள் இல்லை, குறிப்பாக பல மருத்துவமனைகளில் ஸ்கேன் வசதி இல்லை. இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை இதற்காக ஆய்வுகள் நடத்தி, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிந்து பெண் கரு கலைப்பு சிதம்ப ரம் நெய்வேலி போன்ற இடங்களில் அதிகமாக நடந்த போது அதற்கு எதிராக அரசு அதிகாரிகளை சந்தித்து போராடியதன் விளைவாக நெய்வேலியில் செயல்பட்டுவந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக பல போராட்டங்களை நடத்தினாலும் காவல்துறையும் அரசும் பெண்கள் பிரச்சினையை செவிசாய்க்காத நிலையில்தான் உள்ளது. எனவே பெண்க ளின் உரிமைகளுக்காகவும் பாலின சமத்து வத்தை நிலைநாட்டவும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக சமரசமற்ற போர் நடத்த திட்டமிடவும் மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு வடலூரில் கூட உள்ளது.