சென்னை, ஜூலை 19- ஆவடியில் மத்திய ரிசர்வ் காவல் படையில் பணி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் வெள்ளியன்று கைது செய்துசெய்யப் பட்டார்.
மத்திய ரிசர்வ் காவல் படையில் துப்புரவு பணி யாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படையின் குரூப் சென்டரில் வியாழக்கிழமை உடற்தகுதி தேர்வு நடை பெற்றது. இதில் 300 பேர் பங்கேற்றனர். இதில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கரண் சிங் ரத்தோர் (21) என்பவரிடம் தேர்வு கண்காணிப்பு அலுவலர் சோதனை மேற்கொண்ட போது, அதில் அவரின் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்திற்கும், எழுத்துத் தேர்வில் பங் கேற்றவர் புகைப்படத்திற் கும் வேறுபாடு இருந்தது.
இதையடுத்து அவரிடம் பயோமெட்ரிக் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதி லும் கரண் சிங் ரத்தோரின் புகைப்படத்திற்கும், எழுத்துத் தேர்வில் பங்கேற் றவரின் புகைப்படத்திற்கும் வேறுபாடு இருந்தது கண்டறியப்பட்டது. இத னால், எழுத்துத் தேர்வை, கரண் சிங் ரத்தோருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவர் எழுதியது தெரியவந்தது. இதுகுறித்து, மத்திய ரிசர்வ் காவல் படையின் ஆள்சேர்ப்பு வாரிய உதவி கமாண்டண்ட் கந்தன் சத்துவன் வியாழக்கிழமை ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கரண் சிங் ரத் தோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும் அவருக்கு பதிலாக தேர்வு எழுதி ஆள்மாறாட்டம் செய்த இளைஞரை தனிப் படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.