சென்னை, மார்ச் 17- ஆஷா நிவாஸ் சார்பில் சர்வதேச மகளிர் தினம் சென்னையில் கொண்டாடப் பட்டது. முதன்மை சமுதாய வளர்ச்சி அலுவலர் லில்லி ஜோஸ்பின் கலைநிகழ்சி களை துவக்கிவைத்து ஆண்டறிக்கையை சமர்ப்பித்து பேசினார். அமைப்பு சாரா தொழிலா ளர் நல சங்க ஆலோசகர் கீதா, இந்தியன் வங்கி மேலாளர் பாண்டியன், ஆகி யோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர். சுய உதவி குழுவை சார்ந்த ஆட்டோ ஓட்டும் பெண்கள் 40 பேருக்கும் பெண் தொழில் முனைவோர் 20பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 200 சுய உதவி குழுக்களுக்கு சூழல் நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை யினை ஆஷா நிவாஸ் சார்பில் இயக்குனர் டாக் டர் குரியன் தாமஸ் வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில்1500 சுயஉதவிகுழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.