districts

img

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூரில் கலைத் திருவிழா

கடலூர்,நவ.12 - தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படும் என அரசு அறிவித்தது.  அதன்படி, 2024-25 கல்வி ஆண்டுக்கான கலைத்திருவிழா போட்டி திங்கட்கிழமை கடலூர் சி.கே. பள்ளியில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.  முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் வரவேற்றார். கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன்,  மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் அனு, வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதையடுத்து கடலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. நவம்பர் 13ம் தேதி வரையில் இந்த போட்டி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் சிங்காரவேல் நன்றி கூறினார்.