விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் கூனிமேடு ஊராட்சிக்குட்பட்ட ஏரிமேடு குக்கிராமத்தில் 13 குடும்பங்கள் ஓடை புறம்போக்கில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், அந்த இடத்திலேயே நிலைத்து வாழ பட்டா வழங்க வேண்டும் எனவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.