districts

img

வசிப்பிடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்பு

சென்னை, அக்.10 - குடிசை பகுதி மக்க ளுக்கு வசிப்பிடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்பு களை கட்டித்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். விருகம்பாக்கம் தொகுதி, 137, 138வது வார்டுகளில் அடையாறு கரையோர சாலை, ஜம்பு லிங்கம் தெரு, சூளை பள்ளம், காணு நகர் பகுதிகளில் 30 ஆண்டு களாக மக்கள் வசித்து வரு கின்றனர். இங்குள்ள 455 குடியிருப்புகளை அகற்றி, பெரும்பாக்கத்தில் குடிய மர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்க ளன்று (அக்.10) சூளைப் பள்ளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடை  பெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், சென்னை நகரில் உள்ளவர் களை 30-40 கி.மீ. தூரத்தில் உள்ள பகுதியில் மறு குடியமர்வு செய்வதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, குடியிருப்புகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை. மக்கள் குடியிருக்கும் அதே பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும். ஒருவேளை தவிர்க்க இயலாத நிலை ஏற்படுமாயின், குடி யிருப்பு பகுதிக்கு அரு காமையிலேயே மாற்று குடி  யிருப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், விருகை பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.ரெங்கசாமி, பகுதிக் குழு உறுப்பினர் ஆர்.பிர காஷ் மற்றும் ஏ.நடராஜன் (கட்டுமானம்), ஆனந்த் (மாணவர் சங்கம்), என்.ராஜா (முறைசாரா), டி.விஜயகுமார் (மாதர் சங்கம்), ஏ.மணிமாறன் (வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.