districts

img

தொழிலாளர் விரோத கொள்கைகளை சாதி, மத திரையைபோட்டு மறைக்கிறார்கள் ! வடசென்னை மாவட்ட சிஐடியு மாநாட்டில் அ,சவுந்தரராசன் பேச்சு

சென்னை, ஜூலை 31- இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) வடசென்னை மாவட்ட 15ஆவது மாநாடு ஜூலை  30, 31 ஆகிய தேதிகளில்  அம்பத்தூரில் நடைபெற் றது. மாநாட்டிற்கு மாவட்டத்  தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பி.என்.உண்ணி சங்கக் கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் பி.லூர்துசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். துணைத் தலைவர் சு.லெனின்சுந்தர் வர வேற்றார். மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசியதா வது:
 தொழிற்சங்கம் ஏன் தேவைப்படுகிறது?
நாடு முழுவதும் வேலை யில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இதை பயன்படுத்தி முதலா ளிகள், நிரந்தரத் தொழி லாளர்களை குறைத்து  விட்டு, அனைத்திலும் ஒப்பந்தத் தொழிலாளர் களை நியமனம் செய்கி றார்கள். ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு எந்த சமூக பாது காப்பும், வேலை நேரமும்  கிடையாது. எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகும் நிலைமை. வடசென்னை எப்படி தொழில் மையமாக திகழ்ந்ததோ அதுபோல் இன்று மறைமலை நகர்,  திருப்பெரும்புதூர் இருக் கிறது. ஒரு நிறுவனத்தில் கூட செங்கொடி பறக்க அனு மதிக்க மாட்டோம் என்று அப்போது (2011க்கு முன்பு) தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த தா.மோ. அன்பரசன் கொக்கரித்தார். நிச்சயம் செங்கொடி பறக்கும் என்று நாம் கூறினோம். இன்று காஞ்சிபுரம், செங்கல் பட்டில் இயங்கக் கூடிய பன்னாட்டு நிறுவனங்களில் 80க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் செங்கொடி பறந்து கொண்டி ருக்கிறது. இப்போது தொழி லாளர்களின் உரிமைக ளுக்காக பல போராட்டங் களை நடத்திக் கொண்டிருக் கிறோம்.  உலகம் முழுவதும் நிறத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். இந்தியாவில் சாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துகிறாரகள். எந்த ஒரு முதலாளியும் நிறம் பார்த்து, மதம் பார்த்து,சாதி பார்த்து ஊதியம் வழங்குவதில்லை. ஆனால் நிறத்தை சாதியை மதத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் தாங்கள்  கடைபிடிக்கும்  தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, பொருளாதார வீழ்ச்சியை மறைக்கப் பார்க்கிறார்கள். சுய விளம்பரம் மூலம் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் ஒரு தத்துவத் தோடு திரண்டு விட்டால் ஆட்சியாளர்கள் காணாமல்  போவதுதான் வரலாறு. பொருட்களை படைத்தது பிரம்மா அல்ல, மக்கள்தான். எனவே தொழிற்சங்க உரி மையையும், தொழிலாளர் கள் உரிமையையும், ஜனநாயகத்தையும் மீட்டெ டுக்க மதம், மொழி, நிறம்,  சாதி வேறிபாடின்றி ஒரே  வர்க்கம் என்ற அடிப்படை யில் பெரு முதலாளிகளை தவிர்த்து அனைவரையும் ஒன்று திரட்டி இடது ஜன நாயக அணியை கட்டு வோம், அதை நோக்கிய  பயணத்தை முன்னெடுப் போம். இவ்வாறு அ.சவுந்தர ராசன் பேசினார்.