districts

கடற்கரை குதிரைகளுக்கு உரிமம் கால்நடை நல வாரியம் முடிவு

சென்னை,ஆக.2-

     மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்வது குழந்தைகளின் விருப்பத்தில் பிரதானமானது.இது தவிர குதிரை வண்டிகளில் பலர் சவாரி செல்வது வழக்கம். மேலும் பந்தயத்துக்காகவும் சில குதிரைகளை வளர்க்கின்றனர்.

     இதனிடையே சில இடங்களில் குதிரை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் துன்புறுத்தப்படுவது கால்நடை நலவாரியத்துக்கு புகார்கள் வந்தன. மேலும் சில குதிரைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இறப்பதாகவும் தெரியவந்தது. இதை தடுக்க தமிழ்நாடு கால்நடை நல வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக குதிரைகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்துவோர் உரிமம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை நலவாரிய உறுப்பினர் சுருதி வினோத்ராஜ் கூறுகையில், “சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மட்டும் சவாரி உள்ளிட்ட வணிக ரீதியாக 150-க்கும் மேற்பட்ட குதிரை கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை  அதன் உரிமையாளர்கள் சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதை ஆரோக்கியமாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவற்றுக்கு உரிமம் வழங்க பரிந்துரைத் துள்ளோம்” என்றார்.  

     இதற்கிடையே குதிரைகளுக்கு பிரத்யே கமாக சென்னை திருவல்லிக்கேணியில் புகலிடம் அமைக்க சென்னை மாவட்ட ஆட்சியரிடம் விலங்குகள் உரிமை அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.