கள்ளக்குறிச்சி, நவ.14- கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர் சங்கம் சார்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தில் அங்கன் வாடி மையங்களில் குழந்தைகளை பாது காக்கவும் அனைத்து குழந்தைகளுக்கும் சீரான முன்பருவக்கல்வி அளித்திடவும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கிடவும் உணவு செலவு தொகையை உயர்த்தி வாங்கிடவும் போன்ற எட்டுக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு சங்கராபுரம் வட்ட அளவிலான அங்கன்வாடி ஆசி ரியர்கள் மற்றும் உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். வட்டத் தலைவர் கோமதி தலைமையில் வட்டச் செயலாளர் ராஜேஸ்வரி, பொருளாளர் தனலட்சுமி,துணை நிர்வாகிகள் செல்வ குமாரி, வனிதா ஆகியோர் பங்கேற்றனர்.