மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும் கலவரத்திற்கு காரணமான மாநில, ஒன்றிய பாஜக அரசுகளை கண்டித்து மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எஸ்.துளசி தலைமையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகர மன்றத் தலைவர் மலர்விழி குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, தமுமுக நகர செயலாளர் ப.ஹமனுல்லா, மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் நூர்முகமது, விசிக நகர செயலாளர் கிட்டு பிரபாகரன்,காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் கண்ணன், மதிமுக நகர செயலாளர் எம்.ராஜி, சிபிஎம் வட்ட செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட்ட பலர் பேசினர்.