சென்னை,ஆக.17-
மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்து பலமுறை முறையீடு செய்தும் நடவடிக்கை எடுக்காத பெரு நகர சென்னை மாநகராட்சியை கண்டித்து ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு சார்பில் வியாழனன்று (ஆக.17) முற்றுகை இடப்பட்டது.
சென்னை மாநகராட்சி புளியந் தோப்பு சமுதாய நல மருத்துவ மனையில் உரிய, முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தினால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பை சேர்ந்த ஜனகவள்ளி (வயது-28) உயிரிழந்தார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் நேரிடை யாக மனு அளித்த போது, ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி, 59வது வட்டம், பல்லவன் சாலை, இந்திரா நகர் பகுதியை சார்ந்த கனகராஜ் (வயது-37) கடந்தஏப்ரல் 13ஆம் தேதி சேப்பாக்கம் மசூதி தெருவில் சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் வழியாக மேற்கொண்டு வரும் மழை நீர் கால்வாய் பணியில் ஈடுபட்டார். தண்ணீர் தேங்கியிருந்த கால்வாயின் ஒரு மேன்ஹோல் வழியாக சுமார் மூன்று அடி தூரம் உள்ளே சென்று பணிசெய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதுபற்றி மாநகராட்சி ஆணை யரிடம் நேரிடையாக தெரிவிக்கப் பட்டது. அப்போது, “தனக்கு இது குறித்து எவ்விதமான தகவலும் அதி காரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட வில்லை” என ஆணையர் தெரிவித் தார். இதை தொடர்ந்து இப்பிரச்சனை குறித்து ஏப்ரல் 24 ஆம்தேதி விரி வான மனுவையும் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.
இந்த இரண்டு உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை உறுதியாக மேற் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய உயிரிழப்புகள் எதன் காரணமாக ஏற்பட்டன? இனி இதுபோன்று உயிரிழப்புகள் நடக்காமல் இருக்க எத்தகைய வழிமுறைகளை மாந கராட்சி பின்பற்ற போகிறது என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்தி மாநகராட்சி ஆணைய ராக இருந்த ககன்தீப் சிங்கிடம் சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட ஆணை யர், இம்மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து ஒரு வார காலத்தில் பதில் அளிப்பதாக தெரிவித்தார்.
மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின ரோடு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மனு கொடுக்கும் போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவா தம் அளித்தும், இதுவரை எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, வாக்குறுதி அளித்தபடி மேற்கண்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வலியுறுத்தி ஏற்கெனவே ரிப்பன் மாளிகை வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றிருந்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணணை நேரடி யாக சந்தித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தி னர் மனு அளித்தனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணை யர் வாக்குறுதி அளித்தார்.
மேற்கண்ட மனுவின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து கடந்த ஜூன் மாதம் 12ஆம்தேதி மாநகராட்சி ஆணையரை மீண்டும் நேரடி யாக சந்தித்து சிபிஎம் தலைவர்கள் விவரம் கேட்டனர். அப்போது, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும், விரைந்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என ஆணையர் வாக்குறுதி அளித்தார். சென்னை மாநகராட்சியின் ஆணையர்களை உயிரிழந்த குடும்பத்தினரோடு கட்சியின் தலை வர்கள் 5முறை நேரில் சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் தொடர்ந்து அலைகழித்து வரும் போக்குகளை கண்டித்தும், உடனடியாக உறுதி யாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சென்னை மாநகராட்சியின் ஆணை யர் வாக்குறுதி அளித்தபடி வியாழ னன்று (ஆக17) ரிப்பன் மாளிகை முற்று கைப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சர்வே சன், எஸ்.கே.முருகேஷ், வே.ஆறுமு கம், எழும்பூர் பகுதி செயலாளர் கே.முரு கன், எழும்பூர் பகுதிகுழு உறுப்பினர் கள் ஜி.ராஜாமணி, பி.கே.மூர்த்தி, பி.புகழேந்தி, த.சித்தார்த்தன், ஏ.நாக ராணி, ஜெ.பார்த்திபன் ஆகியோருடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் நூற்றுக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.