districts

சென்னை முக்கிய செய்திகள்

சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில்   அதிமுக நகர செயலாளர் கலாட்டா

விழுப்புரம், ஜூலை 26- விக்கிரவாண்டி நடைபெற்ற சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் திடீரென நுழைந்து ஆபாச வார்த்தைகள் பேசி கலாட்டாவில் ஈடுபட்ட விக்கிரவாண்டி அதிமுக நகர செயலாளர் பூர்ணராவ் என்பவரை கைது செய்யக்கோரி சிபிஎம் சார்பில் புகார்  அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி கடைவீதியில் வியாழனன்று  சிபிஎம் வட்ட குழு சார்பில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் வி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன், மாவட்ட குழு உறுப்பினர் எ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த விக்கிரவாண்டி அதிமுக நகர செயலாளர் பூர்ணராவ் என்பவர் ஆர்ப்பாட்டத்தில் திடீரென நுழைந்து ஆபாச வார்த்தைகளை பேசி, சிபிஎம் நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதனை அடுத்து காவல்துறையின் அனுமதி பெற்று நடந்த இந்த  ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்த போலீசார் முன்னிலையில் இந்த கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் அதிமுக நகர செயலாளர் பூர்ணராவின் மீது சிபிஎம் வட்ட செயலாளர் வி.கிருஷ்ணராஜ் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் 

 கடலூர், ஜூலை 26 - கடலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் குழியில் மனிதனை இறக்கி அடைப்பை சுத்தம் செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஜூலை 30 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அமைப்பின் மாவட்டத் தலைவர் ஜெ. ராஜேஷ் கண்ணன், மாவட்டச் செயலாளர் பி. வாஞ்சிநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடலூரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு- கழிவு நீரை அகற்ற பாதாள சாக்கடைக்குள் மனிதனை இறங்கி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவது வேதனையை ஏற்படுகிறது. பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது. இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு உள்ளது. ஆனால், அதை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 30 அன்று மாலை 4 மணிக்கு கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்புணர்வு:   குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம், ஜூலை 26- விழுப்புரம் மாவட்டம்,பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்துசிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து, கொலை செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே டி.நல்லாளம் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்து அருகில் இருந்த கல் குட்டையில் வீசிய வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம்,பெருமுக்கள் ஊராட்சி,டி. நல்லாளம் கிராமம், தைலம் தோப்பு தெருவைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 42) என்பவருக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனையும் , அபராதமாக ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டார்.

காலமானார்

 திருவள்ளூர், ஜூலை 26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துரெட்டி கண்டிகை கிளை உறுப்பினர்  சதீஷ் தந்தையும், வட்டக் குழு உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலருமான எம்.ரவிக்குமாரின் மாமனார் கஜேந்திரன் (வயது 68),  உடல் நலக்குறைவால் வியாழனன்று காலமானார். மறைந்த கஜேந்திரன் உடலுக்கு சிபிஎம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், வட்ட குழு உறுப்பினர்கள் ப.லோகநாதன், டி.கோபாலகிருஷ்ணன், வி.ஜோசப், எம் .சி.சீனு, எம்.சிவக்குமார், குப்பன் உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். அவரின் உடல் வெள்ளியன்று (ஜூலை 26), சின்ன நத்தம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

காலமானார்

ஆரணி, ஜூலை 26- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா ராமசாணி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் எஸ். பாலசுந்தரம் (69), இந்திய ஜனநாயக வாலிபர், சிஐடியு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் செயல்பட்டு வந்தார். உடல் நல குறைவால் வெள்ளியன்று (ஜூலை 26 )  காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ப. செல்வன், சிஐடியு நிர்வாகி கள் சி. அப்பாசாமி, கே. நாகராஜன், முரளி, ஓய்வு பெற்றோர் அமைப்பு நிர்வாகிகள் ராஜாராம், கார்த்திகேயன், அனுசுயா, சிஐடியு நிர்வாகிகள் ஆர். பார்த்திபன், ராமதாஸ், விவ சாயிகள் சங்க நிர்வாகி ஆதிகேசவலு உள்ளிட் டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாலசுந்தரத்தின் உடல் சனிக்கிழமை ஜூலை 27 காலை 10 மணிக்கு ராம சாணி குப்பம் கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

100 நாள் வேலை தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

திருவண்ணாமலை , ஜூலை.26- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா ஆனைவாடி கிராம மக்கள்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை செய்து வருகின்றனர். ஆனைவாடி கிராம ஏரியின் ஒரு பகுதியில் குளம் வெட்டும் பணியை அதிகாரிகள் வேலை வழங்கினார். கடந்த ஒரு மாதமாக இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சிலர் அந்த குளம் வெட்டும் நிலம் தங்களுடையது எனக் கூறி, தொழிலாளர்கள் வெட்டிய குளத்தை ஜேசிபி இயந்தி ரம் மூலம் சம படுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர்,  பணித்தள பொறுப்பாளர் ஆகி யோரிடம் முறையிட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. இதையடுத்து, ஜூலை 26 அன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எம். பிரகலநாதன், ஒன்றிய பொரு ளாளர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

நன்றி  அறிவிப்பு கூட்டம்

விழுப்புரம், ஜூலை.26- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். இதையொட்டி, வெள்ளிக்கிழமை (ஜூலை 26) நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.கௌதம சிகாமணி வரவேற்றார். மக்களவை உறுப்பி னர்கள் எஸ். ஜெகத் ரட்சகன், துரை.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் லட்சு மணன், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், சிபிஐ மாவட்டச் செய லாளர் சௌரிராஜன், திமுக மாவட்டப் பொரு ளாளர் ஜனகராஜ், மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், விசிக மாவட்ட செயலாளர் பெரியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரட்டை என்ஜின் ஆட்சியின்  பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு!

சிபிஎம் குற்றச்சாட்டு

புதுச்சேரி ஜூலை 26- இரட்டை என்ஜின் ஆட்சியின் மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு  குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கையில் புதுச்சேரியை முற்றிலும் புறக்கணித்து, வெற்று பட்ஜெட் என்பதை பறைசாற்றி உள்ளனர். ஒன்றிய அரசாங்கத்தின் 2024-25க்கான பட்ஜெட்,  பாஜக பின்பற்றிவந்த மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கையின் தொடர்ச்சியாகும். கடந்த 11 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கார்ப்பரேட் வரு மான வரி விகிதங்கள் பெரிதும் குறைக்கப்பட்டது. சொத்துவரி முற்றாக நீக்கப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் வயிற்றை நிரப்புவதுதான் மோடி  ஆட்சியின் ஒரே குறிக்கோளாக உள்ளது. இதனால் நாட்டின் செல்வ வளங்கள் ஒரு சதவீதத்துக்கு குறை வானவர்களிடம் மேலும் மேலும் குவிகிறது.  அதேவேலையில் இந்தியா உச்சபட்ச அளவிலான ஏற்றத்தாழ்வு களில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் கடுமையான வேலையின்மை, வறுமை காரணமாக நாட்டின் பெரும்பான்மை மக்கள் மூன்று வேளை உணவு அருந்துவதே கேள்விக்குறியாகிவிட்டது.இந் நிலையிலும் அதற்கெல்லாம் எந்த தீர்வும்  இல்லாத பட்ஜெட்டாக இருப்ப தோடு, உர மானியம், உணவு மானியம், எரிபொருள் மானியங்களையும் வெட்டிச் சுருக்கியிருக்கிறார்கள்.  இரட்டை எஞ்சின் ஆட்சியில் புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. ஒன்றிய பட்ஜெட்டில் பீகார், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இரட்டை எஞ்சின் ஆட்சி நடத்தும் முதல்வர் என்.ரங்கசாமி வைத்த கோரிக்கைகளையும் புதுச்சேரி மக்களின் நலன்களையும் ஒன்றிய நிதியமைச்சர் புறந்தள்ளி இருக்கிறார். ஒவ்வொருமுறையும் புதுச்சேரி அரசின், கடன் தள்ளுபடி, மாநில உரிமை, வரிவருவாய் இழப்பீடு, மூடங்கிடக்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி, அரசு மின்துறை விற்பனை, மூடி கிடக்கும் பஞ்சாலைகள், அரசு சார்பு நிறுவனங்கள், ரேசன்கடை போன்ற பல்வேறு கோரிக்கைகள், பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லாத நிலையில் இதனை முதல்வர் என்.ரங்கசாமி வரவேற்று இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.   மக்களின் வாழ்க்கைப் பிரச்சனை கள் எதையும் தீர்த்திடும் விதத்தில் எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் ஏழை, எளிய, நடுத்தர, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மறுத்தும், அவர்களின் தலையில் சுமைகளை ஏற்றி, வாழ்வாதாரத்தை பறித்து வயிற்றில் அடித்துவிட்டு சாதனை பட்ஜெட் என்று தம்பட்டம் அடித்துள்ளனர்.  இந்த பட்ஜெட் முற்றிலுமாக புதுச்சேரி மற்றும் தேச மக்களுக்கு எதிரான பிற்போக்குத்தனமான பட்ஜெட்டாகும்.  எனவே தொழி லாளர் வர்க்கமும் புதுச்சேரி மக்க ளும் இதற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்று சிபிஎம் புதுச்சேரி மாநில குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு  செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.