districts

img

வேளாண் கல்லூரி மாணவர்கள் உழவர்களுக்கு பயிற்சி

விழுப்புரம், டிச. 30- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உழவர்களுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி முகாம் நடத்தினர். மேல்எடையாளம் ஊராட்சியில் எஸ்ஆர்எம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் தர்ஸ்டோன் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் கிராமப்புற அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேல்எடையாளம் ஊராட்சியில் காளான் வளர்ப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் பணப் பயிர்களில் அடர் நடவு முறை பற்றிய பயிற்சி முகாமை நடத்தினர்.   நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வமணி,கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் டாக்டர்.பி.எஸ்.அக்ஷயா, டாக்டர்.ஜெ. ஜெயஜோதி, டாக்டர்.ஜி.ராஜிவ் மற்றும் உழவர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  இப்பயிற்சி முகாமை  மாணவர்கள் தர்ஷன், பரத், முரளிதரன், உதயகுமார், சுகுமார், அசோக்குமார், அகிலேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.