திருவள்ளூர், டிச 26- ஜெய்ஹிந்த் நகர் பூங்கா ஆக்கிரமிப்பை அகற்ற கும்மிடிப் பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் தவறிவிட்ட காரணத்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி குடியிருப்போர் அமைப்பு சார்பில் பொன்னேரி துணை ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட் டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட் பட்ட ஜெய்ஹிந்த் நகர் (1 வது வார்டில்), உள்ள சுமார் 6.5 ஏக்கர் நிலத்தில் 53 வீட்டுமனைகள் உள்ளன. இந்த மனைப்பிரிவில் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைய உள்ளன. இந்த நகரில் 45 சென்ட் நிலத்தில் அரசு ஆரம்பப் பள்ளி கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மேலும் நகருக்கு என்று பூங்காவிற்காக 86 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய்ஹிந்த் நகர் குடியிருப்புகளில் வசிக்கும் முதியோர், பெண்கள், குழந்தைகள் பொழுதுபோக்கு பூங்காவாக பயன்படுத்தி வந்தனர். இதில் நடைப்பயிற்சியும் மேற் கொண்டு வந்தனர். இந்த நிலையில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி யுள்ளனர். இதனால் குடியிருப்பு வாசிகள், குழந்தைகள் ஆகியோர் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கும்மிடிப்பூண்டி ஜெய்ஹிந்த் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் நான்கு முறை மனுக்கள் கொடுத்தனர். பொன்னேரி துணை ஆட்சியரி டம் 6 முறை நேரடியாக மனு அளித்த னர்.அதன் பின்னரும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கும்மிடிப்பூண்டி நகர கிளை செயலாளர் வி.ஆர்.லட்சுமணன் தலைமையில் 2022 அக்டோபர் 22 அன்று ஊர் வலமாக சென்று கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடை பெற்றது. விசாரித்ததில் பூங்கா நிலத்திற் கான பட்டா , மனைகளை விற்பனை செய்த தனிநபர் பெயரில் உள்ளது தெரியவந்தது. பூங்காவிற்காக இந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, என்று கூறி அந்த நபரிடமிருந்து 86 சென்ட் நிலத்தை தானசெட்டில் மென்ட் வாங்கி பத்திரபதிவு செய்ய வேண்டும் என கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு 2023 ஜனவரியில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. இந்த கடிதத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் பூங்கா ஆக்கிர மிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெய்ஹிந்த் நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தின் நிர்வாகிகள் எம்ஜிஆர்.ராமச் சந்திரன், ஏகாம்பரம், மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், கும்மிடிப்பூண்டி வட்டச் செய லாளர் இ.ராஜேந்திரன் ஆகியோர் செவ்வாயன்று (டிச 26), பொன்னேரி கோட்டாட்சியர் வாகே சங்கேத் பல்வந்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தார்.