ஒரே நாளில் 3 மத்திய பல்கலைக் கழகங்களில் வன்முறையில் ஈடுபட்டு மாணவர்களை தாக்கிய ஏபிவிபி-யை கண்டித்து திங்களன்று (பிப்.12) சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலை கழக கிளைச் செயலாளர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த்சாமி, மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செயலாளர் மிருதுளா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.