சென்னை, டிச. 26- மக்களிடம் அபராதம் விதிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்து வாகனத் துடன் வீடுகள், சிறு வணிக நிறுவனங் கள் முன் நின்று மிரட்டி கட்டாய வசூல் செய்வதை மாநகராட்சி நிர்வாகம் கை விட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் சென்னை மாவட்டக் குழு செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஜி.செல்வா, ஆர்.வேல்முருகன் ஆகியோர் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவை சந்தித்து மனு அளித்தனர். மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், பிரியதர்ஷினி, சரஸ் வதி, செயற்குழு உறுப்பினர் எல்.பி.சர வணத்தமிழன் ஆகியோர் உடன் இருந்த னர். அந்த மனுவில், குப்பை, மற்றும் கட்டிட கழிவுகள், பொது இடத்தில் கொட்டினால் அபராதம் 5,000 ரூபா யாக உயர்த்தப்பட்ட போது, அந்த மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, விசிக, சிபிஐ ஆகிய கட்சி கள் அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மாமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை நிரா கரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது வார்டு உதவி பொறி யாளர்களிடம் ஸ்பாட் ஃபைன் வசூ லிப்பதற்காக தனியாக மெஷின் கொடுத்து அன்றாடம் வசூலில் ஈடுபட வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படு கிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு யூனிட் டிற்கும் (பகுதி) ஒரு வாகனம் கொடுத்து அந்த வாகனம் மூலம் ஒரு நாளைக்கு ஒரு வார்டில் வீடுகள், சிறு வணிக நிறு வனங்கள் முன் நிறுத்தி குறைந்தது 5000 ரூபாய் கட்டாய வசூல் நடை பெறுகிறது. இந்த நடவடிக்கை அப்புரூவல் வாங்கி வீடு கட்டுபவர்கள், வீடு பரா மரிப்பு பணி மேற்கொள்பவர்கள், சாதா ரண ஏழை, எளிய உழைக்கும் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி யுள்ளது. வீடு கட்டுபவர்கள், வீடு பரா மரிப்பு பணி மேற்கொள்பவர்கள் முழு மையாக கட்டுமான பணிகள் முடிந்த தற்கு பிறகுதான் கட்டிட பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற முடியும். எனவே இவ்வாறு பணி மேற் கொள்ளும் இடங்களில் கட்டுமான பணி நிறைவுபெற்ற பிறகு அந்த பொருட் களை அகற்ற அறிவுறுத்தி கால அவ காசம் வழங்க வேண்டும். இதற்கு மாறாக சிறு சிறு கட்டுமான பணி கள் மேற்கொள்ளும் ஏழை, எளிய மக்களை அச்சுறுத்தி, கட்டாயப் படுத்தி, இலக்கு நிர்ணயம் செய்து வசூ லிக்கும் நடைமுறையை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.