districts

img

ஏ.கே.டி. நினைவு மெட்ரிக் பள்ளியில் 100 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி

கள்ளக்குறிச்சி மே 11. கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் ஏ.கே.டி நினைவு மெட்ரிக் பெண்கள்  பள்ளி யில்  10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி கள்  100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதற்காக மாணவி களை  நிர்வாக இணை இயக்குநர் அபிநயா பாராட்டினார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் ஏ.கே.டி நினைவு மெட்ரிக் பெண்கள் பள்ளி யில் தேர்வு எழுதிய மாணவிகள் 100 விழுக்காட்டினர்  தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியளவில் முதலிடம் பிடித்த மாணவி நாகசம்யுக்தா 500க்கு 482 மதிப்பெண் எடுத்துள்ளார். அவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம் வருமாறு: தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 99, அறி வியல் 93, சமூக அறிவியல் 97 மொத்தம் 482 மதிப்பெண் எடுத்துள்ளார். இரண்டாம் இடம் மாணவி சந்தோஷிணி  480 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் 97, ஆங்கி லம் 94, கணிதம் 99, அறிவியல் 93, சமூக அறிவியல் 97 மதிப்பெண் எடுத்துள்ளார்.மூன்றாம் இடம் இரண்டு பேர் மாணவி நந்தனா 479 மதிப்பெண் பெற்றுள்ளார்.  தமிழ் 96, ஆங்கிலம் 92,கணிதம் 98, அறிவியல் 98, சமூக அறிவியல் 95 மதிப்பெண் எடுத்துள்ளார். மற்றொரு மாணவி யான  ஸ்ருதிகா தமிழ் 95, ஆங்கிலம் 96,  கணிதம் 100,அறிவியல் 92, சமூக அறிவியல் 96 என மொத்தம் 479 மதிப்பெண் எடுத்துள்ளார். கணித பாடத்தில் ஒருவர் சென்டம் எடுத்துள்ளார். மேலும் இப்பள்ளி மாணவிகள் 480க்கும் மேல் 2 பேரும் 470 க்கும் மேல் 6 பேரும் 450க்கு மேல் 7 பேரும் 400க்கு மேல் 11 பேரும் 350 க்கு மேல் 15 பேரும் 300க்கும் மேல் 17 பேரும் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர்.  பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளை ஏகேடி கல்வி குழு மங்களின் தாளாளர் மகேந்திரன், செய லாளர் லட்சுமி பிரியா மகேந்திரன், நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குநர் அபிநயா ராஜேந்திரன், பள்ளி முதல்வர் ஏஞ்சலின்திருமறைசெல்வி ஆகி யோர் பாராட்டி வாழ்த்தினார்.