districts

img

வெள்ளம் தேங்குவதை தடுக்க மழைநீர்க் கால்வாய் அமைக்க வேண்டும்

சென்னை, அக். 29 - 123வது வட்டத்தில் வெள்ளம்  தேங்காமல் இருக்க மழைநீர்க் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 123வது வார்டு உறுப்பினர் எம்.சரஸ்வதி வலியுறுத்தினார். பெருநகர சென்னை மாநக ராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பேசிய எம்.சரஸ்வதி, “123வது வட்டத்தில் மழை வெள்ளம்  அதிகளவில் தேங்குகிறது. குறிப்பாக வாரன் சாலையில் வெள்ளம் தேங்கி, விசா லாட்சி தோட்டம் குடியிருப்பு களுக்குள் சென்று விடு கிறது. மழைநீர்க் கால்வாய் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து பணிகள் மேற் கொள்ளப்படுமா? மேலும்  பெரியார் சாலை, திருவள்ளு வர் சாலை பகுதியிலும் மழை நீர்க்கால்வாய் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுமா? அப்பா துரை தெருவில் குழாய் அமைக்க ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் அண்மையில் பெய்த மழையால் சுமார்  இரண்டடி அளவு வெள்ளம்  நின்றது. எனவே, மழை வெள்ளம் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக் கப்படுமா? ராமலிங் கேஸ்வரர் கோவில் தெருவையும் சீரமைக்கப் படுமா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, “பெரியார் சாலை உள்ளிட்ட பகுதி களில் மழை நீர்க்கால்வாய் அமைக்க 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்ததும் பணிகள் தொடங்கும். வாரன் சாலை உள்ளிட்ட  இடங்களில் வெள்ளம்  தேங்காமல் தடுக்க குழாய் கள் அமைக்கப்படும்” என்றார்.