சிதம்பரம், டிச. 26- சமீபத்தில் பெய்த அதிக கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு வாழ்ந்த மக்கள் பெரும்பான்மையானவர்கள் உடமை களை இழந்தனர். அந்த மக்களை பாது காக்க மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உதவி கரம் நீட்டி வரு கின்றன. அதன் அடிப்படையில், சிதம்பரத்தி லிருந்து அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரூ. 1 லட்சம் மதிப்பில் அனுப்பி வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எஸ்.ராஜா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு அனுப்பி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயச்சித்ரா, முத்துக்குமார், நகர் குழு உறுப்பினர் ஜின்னா, ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பழனி, ராகவேந்திரன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா, அமுதா, மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் ஆகாஷ், மாநில நிர்வாகி குமர வேல் கலந்து கொண்டனர்.