districts

img

ஆண்டார்மடம் செல்லும் பாதையின் குறுக்கே மேம்பாலம் : பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜன .1- ஆண்டார்மடம் செல்லும் பாதை யின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி  மக்கள் வலி யுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பழ வேற்காடு அருகில் உள்ள ஆண்டார்  மடத்தை ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழையின் போது வெள்ள நீர் நான்கு பக்கமும் சூழ்வதால், தனித் தீவாக மாறுகிறது. இதனால் அந்த கிராமமே தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடுகிறது. அந்த மக்க ளுடன் சேர்ந்து ஆடு, மாடுகள் கடுமை யாக பாதிக்கப்படுகிறது. பொன்னேரி அடுத்த பழ வேற்காட்டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் தான் ஆண்டார்மடம் கிராமம் உள்ளது. ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி வாழ்ந்து வரு கின்றனர். இங்கு வாழும் மக்கள் கட்டு மான வேலை, விவசாயம், கால்நடை கள் வளர்த்தல்  போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஆண்டார்மடம் கிராமம் அருகில் தான் அமைந்துள்ளது. இந்த தடுப்பணை அருகில் ஆண்டார் மடத்திற்கு  செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை கடந்து தான் பழ வேற்காடு, பொன்னேரி, மீஞ்சூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் ஆண்டார்மடத்திற்கு செல்லும்  சாலை அடித்துச் செல்லப் பட்டு ஆற்றுப்பாதையாக  மாறி யுள்ளது. ஆண்டார்மடத்திற்கு செல்லும் பாதையில் மேம்பாலம் அமைக்காத தால்,  மொத்த வெள்ள நீரால் ஆண்டார்மடம் கிராமம் மூழ்குவ தோடு, பொன்னேரி அருகில் உள்ள சோமஞ்சேரி, தத்தமஞ்சி ஆகிய பகுதி களில் ஆரணி ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள் பாதிப்புள்ளாகிவருகிறது. விளை நிலங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.  தற்போது சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள் ளது. பழவேற்காடு பஜார்,

மருத்துவ மனை போன்ற அடிப்படைத்தேவைக்கு  செல்ல வேண்டும் என்றால் கூட படகில் சென்று பின்னர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.  மேலும் சாலை முற்றிலும் சீரழிந்து உள்ள தால் இரண்டு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழல் உள்ளது.   சிபிஎம் வேண்டுகோள் ஆந்திரா மாநிலம், பிச்சாட்டூர் அணையிலிருந்து ஏறக்குறைய 126 கி.மீ தூரத்திலிருந்து வரும் மழைநீரை தாங்கும் அளவிற்கு கடலுக்கு செல்லும் கால்வாயின் கரைகள் பராமரிப்பு இல்லாததால் ஒட்டு மொத்த மழைநீரும் ஆண்டார் மடத்தை சூழ்ந்து கொள்கிறது. ஏறக்குறைய 10 நாட்கள் மின்சாரம்,  இணைய சேவை எதுவும் இன்றி காடுகளில் வசிப்பது போல மக்கள் வாழ்ந்தனர். இதனால் மழை காலத்தில் படகுகள் மூலம் சென்று தான் அம்மக்களுக்கு  உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. மழை ஓய்ந்து  சில வாரங்கள் கடந்த பிறகும் தொழிலுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கிராமங்க ளிலேயே முடங்கி கிடக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.  இயற்கையின் தொடர் தாக்குதலால், அழிவின் விளிம்பில் உள்ள ஆண்டார் மடம் செல்லும் பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க  வேண்டும் பழவேற்காடு இணைப்பு சாலை யிலிருந்து ஆண்டார்மடம் வரை சாலையை சீரமைக்க வேண்டும். பழ வேற்காடு வரை இயக்கப்படும் மாநகர பேருந்தை ஆண்டார்மடம்  வழி யாக இயக்க வேண்டும். தடுப் பணையையொட்டி கடலுக்கு செல்லும் கால்வாய்யை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மீனவர் சங்கம் மாவட்ட செயலாளர் டி.நித்தியானந்தம் ஆகியோர் வலி யுறுத்தியுள்ளனர். ஆண்டார் மடம் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பாதையின் குறுக்கே மேம்பாலம் அவசியம் என்பதே இந்த அரசு இனி யேனும் உணரும் என நம்புவோமாக...               - பெ.ரூபன்