மாமேதை லெனின் நினைவு தின நூற்றாண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சென்னை செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பணியாற்றி மறைந்த தோழர் எஸ்.வி.எஸ்.மணியின் 14ம் ஆண்டு நினைவு தினமும் ஞாயிறன்று (ஜன.21) அணுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் அவர்களது உருவப்படங்களுக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன், எஸ்.ஜெயசங்கரன், தீ.சந்துரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.