கடலூர், மார்ச் 2- கடலூர் தேவனாம்பட்டி னத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்ற மீனவர் தனக்கு சொந்தமான மீன்பிடி படகை, கடலூர் துறைமுகம் சலங்கை நகரில் உள்ள உப்பனாற்றில் நிறுத்தி வைப்பது வழக்கம். மீனவர் சுரேஷ் தனது படகை சனிக்கிழமை இரவு துறைமுகம் உப்பனாற்றில் நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதி காலை திடீரென அந்த படகு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துறைமுக தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காற்று வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்த னர். இருப்பினும் படகின் பெரும்பகுதி எரிந்து சேத மானதுடன் அதிலிருந்த வலை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என கூறப்படு கிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் துறை முகம் போலீசார், தீ விபத்துக் கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.