districts

img

பள்ளிக்கு வராத மாணவர்கள் காரில் அழைத்து வரும் ஆட்சியர்

திருப்பத்தூர், நவ.11- திருப்பத்தூர் மாவட்டத் தில் பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவர் களை வீடு தேடி சென்று தனது காரில் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ் கர பாண்டியனின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. திருப்பத்தூர் மாவட்டம்  முழுவதும் உள்ள அரசு  பள்ளிகளில் இருந்து பள்ளிக்கு வராமல் இடை யில் நின்ற மாணவர்களின் விவரங்களை சேகரித்து அதன்படி முதல் கட்டமாக,  நாட்றம்பள்ளி ஒன்றியத் துக்குட்பட்ட தாசிரியப் பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 பேர் பல்வேறு காரணங்களுக்காக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருப்பதை மாவட்ட ஆட்சியர் அறிந்தார். உடனடியாக களம் இறங்கிய அவர், பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வி துறையினருடன் அவர்களது வீட்டிற்கு சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வி யின் அவசியத்தை எடுத் துரைத்து மாணவர்களை மாவட்ட ஆட்சியரின் காரில்  அழைத்து வந்து மாணவர் களுக்கு அறிவுரை வழங்கி வகுப்புக்கு அனுப்பி வைத்தார்.  மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகை யில் மாவட்டம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி இடை நிறுத்தல் காரணமாக வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.