சென்னை, ஆக.16–
சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஆர்எம்டி மருத்துவமனை குழுமம் ‘சமர்பன்’ என்னும் மையத்தை சென்னையில் துவக்கியுள்ளது.
சென்னை, அசோக் நகரில் இந்த புதிய மையத்தை ஆர்எம்டி குழும நிறுவனர் டாக்டர் ரிபப்ளிக்கா ஸ்ரீதர் முன்னிலையில் ராஜன் ஐ கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் ராஜன், நல்லி சில்க்ஸ் உரிமையாளர் நல்லி குப்புசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
வேகமான நகரமயமாக்கல் காரணமாக வயதானவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதில் பலர் தனிமையில் இருப்பதோடு அவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் கிடைப்பதில்லை. சமர்பன் மையத்தின் முக்கிய நோக்கம், இப்பகுதியில் உள்ள முதியோர்களின் தேவைகளில் பெரும்பான்மையானவற்றை பூர்த்தி செய்வதாகும் என அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.