districts

img

மாவீரன் பகத்சிங்கின் 91-வது நினைவஞ்சலி கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பெரும்புதூர் வட்டக்குழு சார்பில், மாவீரன் பகத்சிங்கின் 91-வது நினைவஞ்சலி கூட்டத்தில் கட்சியின் 23 வது மாநில மாநாட்டுக் கொடியேற்றும் நிகழ்ச்சி வட்டச் செயலாளர் ப.வடிவேலன் தலைமையில் நடைபெற்றது.  இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் முகமது கனி, எம்.தினகரன், ஜனிட்டன், சுகுந்தன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் டி.எல்.கார்த்தி, பகுதி செயலாளர் செல்லப்பன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செய்தனர்.


மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தையொட்டி   இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு  சார்பில்  திருவொற்றியூரில் உள்ள  பகத்சிங்  சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது.  பகுதி செயலாளர் சேகுவேரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கருணாநிதி சங்க கொடியை ஏற்றிவைத்தார். வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலின், இசக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.