districts

img

சாலை விபத்தில் மாணவர்கள் 3 பேர் பலி

திருவண்ணாமலை, நவ.20- திருவண்ணாமலை மாவட்டம்,  வேட்டவலம் அண்ணா நகரை சேர்ந்த  முத்துலிங்கம் (வயது 16), சின்னஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த ராமன்(17) பன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (17) ஆகிய மூவரும் வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர்.       இந்நிலையில் நண்பர்களான இவர்கள் பள்ளி முடித்து விட்டு செவ்வாயன்று மாலை வேட்டவலத்தில் இருந்து தளவாய் குளத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் ஆவூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவூர் சாலை வளைவு பகுதியில்  செல்லும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முருகர் கோயில் அருகே சாலையோரம் உள்ள அரசமரத்தில் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த முத்துலிங்கம் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் ராமன் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவர் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் மேலும் சம்பவ இடத்திலேயே பலியான முத்துலிங்கம் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமன்,ஜெகதீஷ் இருவரும் மேல் சிகிச்சையாக அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ராமன் வழியிலேயே செவ்வாயன்று இறந்தார்.அடுக்கம் பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது ஜெகதீஷ் புதனன்று உயிரிழந்தனர்.