செங்கல்பட்டு, ஜன. 4- சிங்கப்பெருமாள் கோவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று லாரிகள் ஒரு இருசக்கர வாகனம் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு லாரிகள் தீப்பற்றி எரிந்ததில் லாரி ஓட்டுநர் ஒருவர் உடல் கருகி பலியானார் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி கண்டெய்னர் லாரி புதனன்று இரவு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மெய்யூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் இயக்கி வந்தார். லாரி சிங்கப் பெருமாள் கோவில் அருகே வந்தபோது, ஒரகடம் செல்வதற்காக சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியது. தொடர்ந்து ஏழுமலை தான் ஓட்டி வந்த கண்டெய்னர் லாரியை இடது புறமாக திருப்பி உள்ளார். அப்போது, சென்னை யில் இருந்து அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது அதி வேகமாக கண்டெய்னர் லாரி மோதியது. இதில் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு இரண்டு லாரிகளும் மோதி இழுத்து செல்லப்பட்டன. இதில் இரண்டு லாரிகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை திடீரென தீப்பற்றி எரிந்ததில் டிப்பர் லாரி யின் உள்ளே இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்ப வர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் மற்றும் மகேந்திரா சிட்டி தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் உடல் கருகி பலியான முத்துப்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழி பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.