districts

img

மதுராந்தகம் அருகே 3 பேருந்துகள் தொடர் விபத்து: 5 பேர் படுகாயம்

மதுராந்தகம், டிச. 3- திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது. மதுராந்தகம் அடுத்த  ஜானகிபுரம் அருகே சாலையின் குறுக்கே திடீரென லாரி வந்ததால் அரசு பேருந்து லாரியில் மோதாமல் இருக்க திடீரென பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்த 2  தனியார் சொகுசு பேருந்துகள் மற்றும் கார் ஒன்று ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று விட்டு காரில் சென்று கொண்டிருந்த 2 சிறுவர்கள், 2 பெண்கள்  உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.