districts

img

ரயில்வே கடவு பாதைகளில் 28 மேம்பாலங்கள்: அமைச்சர்

வேலூர், நவ.9- வேலூர் அரசு பென்ட்ல ண்ட் மருத்துவ மனை வளாகத்தில் ரூ.197.81 கோடியில் கட்டப்படும் மருத்துவமனைகள் பணி களை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  மருத்துவமனை கட்டுமான பணிகளை தரமாகவும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ள காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் விரைந்து பணி களை மேற்கொள்ள உத்தர விட்டார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:- பாலாற்றின் குறுக்கே விரிஞ்சிபுரத்தில் மேம்பாலம் அமைக்க துறையின் மூலம் ஆய்வுகள் செய்து வரை படம் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடந்து வருகிறது விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டப்படும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 28 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப் பட்டுள்ளது. காட்பாடியில் புதிய ரயில்வே மேம்பாலம் ஒன்று விரைவில் அமை யும். அதிமுக ஆட்சியில் பல ரயில்வே மேம்பால பணிகள் துவங்கி முடிக்காமல் விட்டுவிட்டார்கள் அதற்கு காரணம் இணைப்பு சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தாமல் விட்டுவிட்டு சென்றனர். அதனை கணக்கெடுத்து அந்த பணிகளும் தற்போது நடக்கிறது. செங்கல்பட்டு அருகே செய்யூரில் இருளர் சமுதாயம் மற்றும் திருநங்கை களுக்கு கட்டப்பட்ட வீடுகள் பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது அது பொதுத் பணித்துறை கட்டுப்பாட்டில் இல்லை. உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ளது அந்த துறை கவனத்திற்கு கொண்டு சென்று அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன், சிறப்பு தலைமை பொறியாளர் சங்கரலிங்கம், செயற்பொறியாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.