சென்னை, ஜூலை 10- தமிழகத்தில் அதிகரித்து வந்த கொ ரோனா பரவல் தற்போது குறைந்து வரு கிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஞாயிறன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,560 ஆகும். தொற்று பரவலைக் கண்டறிய பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 34, 469 ஆகும். கொரோனா பாதிப்பால் ஞாயிறன்று யாரும் உயிரிழக்கவில்லை. சென்னையில் கொரோனா பாதிப்பு 804 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.