சிதம்பரம், ஏப். 13 - சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு வாக்குகள் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புவனகிரி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
கொடூரங்களுக்கு துணைபோன அதிமுக
இந்த தேர்தலில், பாஜகவுடன் அதிமுகவிற்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று எடப்பாடி பேசி வருகிறார். ஆனால், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது, ஆட்சியில் இல்லாத கடந்த மூன்றாண்டு காலம் ஒன்றிய பாஜக அரசும் பிரதமர் மோடி யும் செய்து கொண்டிருந்த அனைத்து கொடூரங்களுக்கும் பக்க பலமாக இருந்தவர் எடப்பாடிதான்?
கொலைகார கூட்டமான பாஜக வுக்கு காவடி தூக்கியதும் இந்த எடப்பாடிதான். இவை எதையும் தமிழக மக்கள் மறக்கவில்லை. ஆனால், இவை களை மறைப்பதற்காக, நான் ஒரு விவ சாயி என வேடம் போடுகிறார்எடப்பாடி.
தமிழகத்தைக் காட்டிக் கொடுத்த எடப்பாடி
வெள்ளையனை எதிர்த்துப் போராடி தூக்கு மேடைக்குச் சென்ற கட்டபொம்மனுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்த கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டயப்பனுக்கும் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது இதில், எட்டப்பன் வரலாறு தான் எடப்பாடிக்கு பொருந்தும்.
நாடு முழுக்க குப்பனும், சுப்பனும் கட்டிய வரிப் பணத்தை அம்பானிக் கும், அதானிக்கும், வரிச் சலுகை களாக வாரி வழங்கியதுடன் இந்த இருவ ரும் நமது பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் பல்லாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்தார் மோடி.
மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட போது எட்டிக்கூட பார்க்க மன மில்லாத பிரதமர் மோடி, இப்போது தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறார். அவர் இங்கேயே பாய் போட்டு படுத்துக்கொண்டாலும் ஒரு தொகுதி யில் கூட வெற்றி பெற முடியாது. கார ணம், அந்த அளவுக்கு மக்கள் கோபத்தில் உள்ளனர்.
இந்தியா கூட்டணி சார்பில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள நமது திருமாவளவனை கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை பல லட்சம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதிமுக, பாஜக வேட்பாளர் கள் இருவரையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் பேசினார்.
இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கி னார். புவனகிரி ஒன்றியச் செயலாளர் பி.ஜெ. ஸ்டாலின் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் மாதவன், திமுக ஒன்றியச் செயலாளர் மனோகர், மதி யழகன், காங்கிரஸ் மாவட்டத் தலை வர் செந்தில்நாதன், கடலூர் மாநக ராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர் பாவாணன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பூசி. இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாய் போட்டே படுத்தாலும் வெற்றிபெற முடியாது