districts

img

ராக்கியாபாளையம் நீர்நிலை குட்டையில் ‘பெண்கள் விடுதி’ கட்ட கடும் எதிர்ப்பு

திருப்பூர், ஜன.9- ராக்கியாபாளையம் நீர்நிலை குட்டையில் பெண்கள் விடுதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், திருமுரு கன்பூண்டி நகராட்சி, புதிய 14 ஆவது வார்டுக்குட்பட்ட ராக்கியா பாளையம்  கணியாம்பூண்டி வீதி யில் தெற்கு பிள்ளையார் கோவில் அருகே அரசுக்கு சொந்தமான நாலரை ஏக்கர் நிலம், மழைநீர் வடிகால் மற்றும் கசிவு நீர்நிலை குட்டையாக உள்ளது. அந்த குட் டையில் தேங்கி இருக்கும் தண் ணீர் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் கிணற்றில் ஊற்றாக வந்து சேரும். அதேபோல் அங் குள்ள ஆழ்குழாய் கிணறு மூலம்  ராக்கியாபாளையம்  பகுதி முழுவ தும் உப்பு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகி றது. இந்நிலையில், ஒன்றிய அரசு மூலம் தில்லியை சேர்ந்த பில் டிங் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி புரோமோஷன் கவுன்சில் மூலம்  டெண்டர் எடுத்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் அனு மதி பெற்று வேலை செய்ய வந் துள்ளதாக ஒப்பந்ததாரர் முரளி கிருஷ்ணன் என்பவர், அந்த இடத் திற்கு பொக்லைன் வாகனம் மற் றும் பணியாளர்களுடன் வந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, இந்த இடம் 50 சென்ட் இடத்தில் ரூ.6 கோடி மதிப் பீட்டில் பெண்கள் விடுதி கட்டுவ தற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறி  அந்த இடத்தை சுத்தம் செய்து ஆரம்பக்கட்ட வேலையை  தொடங்கினர்.  இதனால் அதிர்ச்சியடைந்த  அப்பகுதி மக்கள் பொக்லைன் வாகனத்தை சிறைபிடித்து அவர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். மேலும், இதுகுறித்து அதிகா ரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் அவிநாசி வரு வாய் ஆய்வாளர் ஈஸ்வரி, திரு முருகன்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகி யோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் அவர்களின் சமாதா னத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், சுகுமார்,  மூர்த்தி, பூபதி, சதிஷ் ஆகியோர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறை யிட்டனர். மேலும், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீதை சந்தித்து புகார் மனு அளித்தனர்.