அவிநாசி, பிப்.26- அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் யாமறிந்த புல வரே என்ற நூலில் வெளியி டப்பட்டது. செம்மொழியான தமிழ் மொழி தினத்தை கடைப்பி டிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியில் புத்தகம் மற்றும் ஆவணப் படம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் அவிநாசி அரசு கலைக் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் மணி வண்ணன் எழுதிய யாமறிந்த புலவரே என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை திருப் பூர் சிக்கண்ணா கல்லூரி முனைவர் பாலசுப் பிரமணியன் பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து சரவணன் இயக்கத்தில் நாடகக் கொட்டகை ஆவணப்படம் வெளியிடப் பட்டது. இந்த ஆவணப்படம் சென்னை லயோலா கல்லூரியில் வெளியிடப்பட்ட 400 படங்களில் ஏழாவது இடம் பெற்றது குறிப் பிடத்தக்கது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அவி நாசி கிளைச் செயலாளர் தினகரன், நல்லது நண்பர் அறக்கட்டளை நிர்வாகி ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதையடுத்து, அவிநாசி அரசு கலைக் கல்லூரி முதல்வர் நள தம், தமிழ்மொழி பற்றுதல் குறித்தும் செம் மொழி அறிமுகம் குறித்தும் பேசினர். கவிஞர் விஜயராஜ் இலக்கியம் குறித்து பேசினார். தமிழ் உதவி பேராசிரியர் புனிதா ராணி, நந் தினி, ஜோதி பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.