districts

img

உலக சைக்கிள் தினம் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவை, ஜூன் 3- உலக சைக்கிள் தினத்தையொட்டி என்சிசி மாணவர்கள் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். உலக சைக்கிள் தினம் ஜூன் 3 ஆம் தேதியன்று கொண்டா டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உலக சைக்கிள் தினத்தையொட்டி மாணவர்கள் விழிப்பு ணர்வு பேரணியை நடத்தினர். கோவை பந்தய சாலை பகுதி யில் கல்லூரிகளைச் சேர்ந்த என்சிசி மாணவிகள் சைக்கிள்  ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த சைக்கிள் விழிப்பு ணர்வு பேரணி நடத்தினர். முன்னதாக, இந்த பேரணியை, 5 ஆவது பட்டாலியன் மேஜர் சுபேதார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில்  நூற்றுக்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டு உலக சைக்கிள் தின பதாகைகளை ஏந்தி விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.