districts

img

ஆவின் நிறுவன தொழிலாளர்களை பணிவரன் முறைப்படுத்துக

சேலம், மார்ச் 25- ஆவின் நிறுவனத்தில் பணியாற் றும் தொழிலாளர்களை பணி வரன் முறைப்படுத்த வேண்டும் என தமிழ் நாடு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் நல சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம் சேலம் புதிய பேருந்து நிலை யம் அருகே உள்ள தனியார் விடுதி யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் மூன்றாம் அடுக்காக, பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங் கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சுமார் 24 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அதில், 16 ஆயிரம் பேர் நிரந்தர பணியாள ராகவும், 5 ஆயிரம் பேர் தொகுப்பூதிய பணியாளர்களாகவும், எஞ்சியவர்கள் தினக்கூலி பணியாளராகவும் உள்ள னர். அவர்களை பணிவரன் முறைப் படுத்த வேண்டும்.  மேலும், சுமார் 5 ஆண்டுகளாக எவ் வித ஊதிய உயர்வும் வழங்கப்பட வில்லை. எனவே அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். பால் உற்பத்தி வெகுவாக குறைந்து வரும் நிலையில், தனியார் நிறுவ னங்கள் விலை அதிகமாக வழங்கு வதை கருத்தில் கொண்டு பால் கொள் முதல் விலை உயர்த்தி வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.செல்வம் தெரிவித்தார்.