மேட்டுப்பாளையம், மார்ச் 20- விளைநிலங்களில் காட்டுப் பன்றிகளின் ஊடுருவலை கட்டுப் படுத்தக்கோரி வனச்சரக அலுவ கங்கள் முன்பு போராட்டங்கள் மற் றும் மாநிலம் தழுவிய பேரணி நடத்தப்படும் என மேட்டுப்பாளை யத்தில் நடைபெற்ற காட்டுப்பன் றிகள் ஒழிப்பு மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தில், காட்டைவிட்டு வெளியேறும் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர் சேதங் கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள் ளது. யானைகளால் ஏற்பட்டு வரும் சேதங்கள் ஒருபுறமிருக்க, அண்மை காலமாக காட்டுப்பன்றி களால் ஏற்படும் பாதிப்புகள் விவ சாயிகளை நிலைகுலைய வைத் துள்ளது. விளை நிலங்களுக்குள் கூட்டமாக நுழையும் காட்டுப் பன்றிகள் பாக்கு, வாழை, கரும்பு, சோளம், காய்கறி பயிர்கள் என எதனையும் விட்டு வைக்காமல் சில மணி நேரங்களில் அடியோடு சேதப்படுத்தி விடுகிறது. மேலும், காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவ தால், இவற்றை கட்டுப்படுத்தா விட்டால் இனி இப்பகுதிகளில் விவசாயமே செய்ய இயலாது என்ற நிலையை ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இப்பிரச்ச னையை முன்னிறுத்தி ஞாயிறன்று மேட்டுப்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் காட் டுப்பன்றிகள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. தமிழக விவசாய சங்கத்தின் மாநில பொது செய லாளர் வேணுகோபால் தலை மையில் நடைபெற்ற இம்மாநாட் டில், கோவை மட்டுமின்றி இதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற் பட்ட விவசாயிகள் பங்கேற்று காட்டுப்பன்றிகளால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசி னர். காட்டை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகும் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல வனத்துறையினருக்கு அனுமதி இருந்தும், அதனை நடை முறைப்படுத்த வனத்துறை அதி காரிகள் முன்வருவதில்லை என குற்றம் சாட்டிய விவசாயகள், இப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மாநாட் டின் இறுதியில், அபரிமிதமாக பெருகி பயிர்களை நாசப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை வனத் துறையினர் சுட்டுக்கொன்று கட் டுப்படுத்த வேண்டும் அல்லது விளை நிலங்களுக்குள் நுழையும் அவற்றை விவசாயிகளே கொல்ல அனுமதியளிக்க வேண் டும். இக்கோரிக்கைகள் ஏற்கப் படாதபட்சத்தில் வனச்சரக அலுவ லகங்கள் முன்பாக போராட்டங் கள் நடத்துவது, மாவட்டந்தோ றும் மாநாடு மற்றும் மாநிலம் தழுவிய பேரணி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.